பேரன்புடையீர் வணக்கம்,
திருக்கோவில்கள் நமது சமுதாயத்தின் பரம்பரை சொத்து. இதனை பாதுகாக்க பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினரும் ஆண்டி முதல் அரசன் வரை உடல், பொருள், ஆவி உள்ளிட்ட தியாகங்களை செய்துள்ளனர். அவ்வகையில் இவற்றை கட்டி காப்பது இதன் புனிதத்தை பேணுவது, இதை சார்ந்த பணிகளை செய்வது நமது தார்மீக கடமையாகும். அதற்காக துவக்கப்பட்டது தான் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் ஆகும்.
